வாருங்கள் வாருங்கள். அனைவரும் ஒன்று சேர்ந்து சக்தி மிக்க
சமுதாயத்தைக் கட்டியெழுப்புவோம்.
-அன்புடன் சக்திப்பிரதா

வெள்ளி, 14 ஜனவரி, 2011

முதல் முயற்சி

வலையுலக சகோதர சகோதரிகளே!
உங்களிற்கு என் அன்பான வணக்கங்கள். முதற் தடவையாக நான் இவ் வலையுலகிற்குள் அடியெடுத்து வைக்கிறேன். என்னுள் புதைந்திருக்கும் எண்ணங்களை இங்கு வெளியிடலாம் என்ற ஆவலில் வந்திருக்கிறேன். என்னை யார் எழுதச் சொல்லிக் கேட்டது. இப்படி ஒரு பதிவு தேவை தானா? என்று பல தடவை யோசித்ததுண்டு. இப்படி யோசித்து யோசித்தே நீண்ட காலத்தைக் கடத்திவிட்டேன். இருந்தும் ஏதோவொரு எண்ண உத்வேகத்தில் இதை ஆரம்பிக்கின்றேன். எதையும் மனதில் வைத்திருக்காமல் புலம்பிக் கொட்டிவிட்டால் நல்லது என்று தோன்றியது. அதுதான் இப்படியொரு வேண்டாத வேலையில் இறங்கியிருக்கிறேன். வலையுலக சகோதர சகோதரிகளே தயைகூர்ந்து பொறுத்தருள்வீராக. 

என்றும் அன்புடன், 
சக்திப்பிரதா