வாருங்கள் வாருங்கள். அனைவரும் ஒன்று சேர்ந்து சக்தி மிக்க
சமுதாயத்தைக் கட்டியெழுப்புவோம்.
-அன்புடன் சக்திப்பிரதா

வெள்ளி, 14 ஜனவரி, 2011

பொங்கலோ பொங்கல்

அனைத்து தமிழர்களுக்கும் என் இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்

சிறிய வயதில் பள்ளிப் பாடத்தில் ஒரு பொங்கல் பாட்டு வருகின்றது. எமது வகுப்பு ரீச்சா் அப் பாடலை இராகத்துடன் பாட சிறியவர்கள் நாமெல்லோரும் இணைந்து அதை மகிழ்சியுடன் பாடி ஆடுவோம். அப் பாடலில் உள்ளது போலவே எனது வீட்டிலும் அனைத்து செயற்பாடுகளும் நடக்கும். அதனால் சிறுவயதில் இதைப் பாடும் போது எனது வீட்டு காட்சிகளே மனதில் சித்திரமாய் ஓடும். அவ்வகையில் இப் பாடல் என் பிஞ்சு வயதில் பசுமரத்தாணி போல் மனதில் நிலைபெற்றுவிட்டது. ஒவ்வொரு பொங்கலின் போதும் தவறாமல் என் மனதில் இசைக்கும் பாடல் இது. என்னுடன் சேர்ந்து நீங்களும் பாடுங்கள். நாமெல்லோரும் சேர்ந்து அந்த நாள் ஞாபகங்களை இன்பமுடன் மீட்டி மகிழ்வோம்.

பொங்கலோ பொங்கல்

தைத் திருநாள் இல்லமெல்லாம் தளிர்த்திடும் தைப்பொங்கல்
இத்தனை நாள் காத்திருந்தோம் இனிய தமிழ்ப் பொங்கல்
கோலமிட்டு விளக்கேற்றி கும்பிடுவார் அம்மா
பாலெடுத்துப் பொங்கலுக்கு பானை வைப்பார் அப்பா
விரும்பிய மா வாழை பலா விதம் விதமாய் கனிகள்
கரும்பிளநீா் படைத்து மனம் களித்திடுவோம் நாங்கள்
வெண்ணிறப்பால் பொங்கிவர வெடி சுடுவோம் நாங்கள்
இன்னமுதப் பொங்கலுண்ண இணைந்து நிற்போம் நாங்கள்